தே1ஷாமேவானுக1ம்பா1ர்த2மஹமஞானஜம் த1ம: |
நாஶயாம்யாத்1மபா4வஸ்தோ2 ஞானதீ3பே1ன பா4ஸ்வதா1 ||11||
தேஷாம்---- அவர்கள் மீதுள்ள; ஏவ—-மட்டும்; அனுகம்பா-அர்த்தம்—--இரக்கத்தால்; அஹம்--—நான்; அஞான-ஜம்—--அறியாமையால் பிறந்த; தமஹ---—இருளை; நாஶயாமி--—அழிக்கிறேன்;ஆத்ம-பாவ---—அவர்களின் இதயங்களுக்குள்; ஸ்தஹ----உறைகிற; ஞான--—அறிவின்; தீபேன--—விளக்கினால்; பாஸ்வதா—--ஒளிரும்
BG 10.11: அவர்கள் மீதுள்ள இரக்கத்தால், அவர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நான், அறியாமையால் பிறந்த இருளை, அறிவின் ஒளிரும் விளக்கினால் அழிக்கிறேன்.
தே1ஷாமேவானுக1ம்பா1ர்த2மஹமஞானஜம் த1ம: |
நாஶயாம்யாத்1மபா4வஸ்தோ2 ஞானதீ3பே1ன பா4ஸ்வதா1 ||11||
அவர்கள் மீதுள்ள இரக்கத்தால், அவர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நான், அறியாமையால் பிறந்த இருளை, அறிவின் ஒளிரும் விளக்கினால் அழிக்கிறேன்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கருணையின் கருத்தை மேலும் விரிவுபடுத்துகிறார். முன்பு, அவர் அன்புடன் தங்கள் மனதை தன்னில் ஈடுபடுத்தி அவரை அவர்களின் திட்டங்கள், எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளின் முதன்மையான பொருளாக ஆக்குபவர்களுக்கு அவர் அதை வழங்குகிறார் என்று விளக்கினார். இப்பொழுது, ஒருவர் அவருடைய அருளைப் பெறும்பொழுது என்ன நடக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்துகிறார். அவர்களின் இதயத்தில் உள்ள இருளை ஞான தீபத்தால் அழிக்கிறார் என்று கூறுகிறார்
அறியாமை பெரும்பாலும் இருளாக அடையாளப்படுத்தப்படுகிறது, ஆனால் கடவுள் பேசும் இந்த ஞான விளக்கு என்ன? தற்பொழுது, நமது புலன்கள், மனம் மற்றும் புத்தி அனைத்தும் பொருள், கடவுளோ தெய்வீகமானவர். எனவே, நாம் அவரைப் பார்க்கவோ, கேட்கவோ, அவரை அறியவோ, அவருடன் ஐக்கியமாகவோ முடியாது. கடவுள் தனது அருளை வழங்கும்பொழுது, அவர் தனது தெய்வீக யோகமாயா ஆற்றலை ஆன்மா மீது வழங்குகிறார். இது ஶூத்3த4 ஸத்1வ (நன்மையின் தெய்வீக முறை) என்றும் அழைக்கப்படுகிறது, இது மாயையின் ஸத்வ குணத்திலிருந்து (நன்மையின் முறை) வேறுபட்டது. அந்த ஶூத்த ஸத்வ சக்தியை நாம் பெறும்பொழுது, நமது புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவை தெய்வீகமாகின்றன. எளிமையாகச் சொல்வதென்றால், கடவுள் தனது அருளால் ஆன்மாவுக்குத் தெய்வீக உணர்வுகளையும், தெய்வீக மனதையும், தெய்வீக புத்தியையும் அருளுகிறார். இந்த தெய்வீக கருவிகளைக் கொண்டு, ஆன்மாவால் கடவுளைக் காணவும், கடவுளைக் கேட்கவும், கடவுளை அறியவும், கடவுளுடன் ஐக்கியமாகவும் முடிகிறது. எனவே, வேதா3ந்த1 த3ரிஷனம் கூறுகிறது: விஶேஷானுக்3ரஹாஶ் ச1 (3.4.38), ‘கடவுளின் அருளால் மட்டுமே ஒருவர் தெய்வீக அறிவைப் பெறுகிறார். இந்த வகையில், ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடும் ஜோதி அவரது தெய்வீக சக்தியாகும். கடவுளின் தெய்வீக சக்தியின் ஒளியால், பொருள் ஆற்றலின் இருள் அகற்றப்படுகிறது.